ADDED : ஜூலை 31, 2024 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச் சூழல் மற்றும் பசுமைப்படை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில் பள்ளி சுற்று சூழல் அலுவலர் ஜெயபால், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஆசிரியர் கனகராஜ் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு மரக்கன்றுகளின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.