ADDED : மார் 23, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அடுத்த வடதலைக்குளம் துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயமாலாசெல்வக்குமார் முன்னிலை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் செல்வி உலக வன தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
உதவி ஆசிரியை வசந்தா நன்றி கூறினார்.

