ADDED : செப் 06, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மலட்டாற்றில் மணல் கடத்திய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கட்டமுத்துபாளையம் மலட்டாறு பகுதியில் நேற்று அதிகாலை மணல் கடத்தப்படுவதாக புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு, மகேந்திரா பிக்கப் சரக்கு வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதையடுத்து, மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தை புதுப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.