ADDED : ஜூலை 17, 2026 06:22 PM
கடலுார்: கடலுார் மாநகரில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி செடல் உற்சவம் நடந்தது.கடலுார், தேவனாம்பட்டிணம் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை கரகம் எடுத்தல், அம்மனுக்கு சாகை வார்த்தல், மதியம் செடல் உற்சவம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. கடலுார் அரசு மருத்துவமனை அருகில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சாகை வார்த்தல், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கடலுார், துறைமுகம் அயல்நாயக்கன் வீதி கோட்டை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது.
