sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல்; சிதம்பரம் அருகே 3 பேர் கைது


ADDED : ஜூன் 19, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சிதம்பரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சிதம்பரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கடலுார் - சிதம்பரம் சாலையில் அத்தியாநல்லுார் கிராமம் அருகே வந்த மினி டெம்போவை நிறுத்தினர். உடன் டெம்போவில் இருந்து தப்பியோடிய மூவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் வேலுார் மாவட்டம், காட்பாடி நாகராஜன் மகன் பூவரசன், 26; பாபு, 40; ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் சிவக்குமார், 32; என்பதும், இவர்கள் புதுச்சத்திரம், அத்தியா நல்லுார், முட்லுார் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வாத்து தீவனத்திற்காக 50 கிலோ வீதம் 22 சாக்குகளில் 1,100 கிலோ அரிசியை வேலுாருக்கு கடத்தியது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிடெம்போவையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us