ADDED : மே 03, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் குடிமைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கி வைக்கும் நபர்கள் குறித்து 1800 599 5950 என்ற கட்டணமில்லா எண்ணில் தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தகவல் அளிக்கும் நபரின் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.