/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
/
சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED : மார் 25, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் பெருமாள் தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயார் சேர்த்தி உற்சவத்தில் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

