ADDED : ஜூலை 02, 2024 05:25 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி திருவருள் இறைபணி மன்றம் சார்பில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
மன்ற பொருப்பாளர் முருகன் வரவேற்றார். 63 நாயன்மார்களில் ஒருவரான சத்தி நாயனார் குறித்து தமிழாசிரியர் சுரேஷ் சொற்பொழிவாற்றினார். திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை திருவருள் இறைப்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
