ADDED : ஏப் 23, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுாரில், மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர் இறந்தார்.
கடலுார், துறைமுகம் கிஞ்சம்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் மகன் சாமிநாதன்,17; பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியுள்ளார். இவர், கடந்த 20ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பெஞ்ச் மீது வைக்கப்பட்டிருந்த மின்விசிறி கீழே விழுந்தது.
மின்விசிறியை சாமிநாதன் சரி செய்தபொது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடன், சாமிநாதனை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், சாமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
புகாரின் பேரில், கடலுார், துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

