ADDED : ஜூன் 11, 2024 11:46 PM
அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையத்தை, இந்திய மாணவர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவானந்த் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குமரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சவுமியா கண்டன உரையாற்றினர்.
இதில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகள் மீது உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவநந்தினி, பூபதி, ஞானப்பிரகாஷ், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
