ADDED : ஆக 21, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், :கொல்கட்டா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரி முன்பு, மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவானந்த் மற்றும் கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பெண் மருத்துவரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.