ADDED : செப் 10, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் முதுநகரில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
கடலுார், முதுநகர் மணவெளியைச் சேர்ந்தவர் பாபு. இவர், அதே பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருள்குடோன் நடத்தி வருகிறார். இங்கு நேற்று மாலை 5:30 மணிக்கு திடீரென மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்த கடலுார், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையில் சிப்காட் மற்றும் கடலுாரில் இருந்து மொத்தம் 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.