/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சூப்பர் ருசிபால் பூத் கிருமாம்பாக்கத்தில் திறப்பு
/
சூப்பர் ருசிபால் பூத் கிருமாம்பாக்கத்தில் திறப்பு
ADDED : ஆக 29, 2024 07:06 AM

கடலுார்: கிருமாம்பாக்கத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் புகழ் பெற்ற சூப்பர் ருசி பால் பூத் திறப்பு விழா நடந்தது.
கிருமாம்பாக்கம் காலனி இந்திரா நகரில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் புகழ்பெற்ற சூப்பர் ருசி பால் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. விழாவிற்கு வருகை தந்தவர்களை, அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ சாய் கிருஷ் ஏஜென்சி உரிமையாளர் சுதன் வரவேற்று பால் விற்பனையை துவக்கி வைத்தார். இங்கு திருமணம் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் சூப்பர் ருசி பால், தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம், நெய் ஆகியவை டோர் டெலிவரி செய்யப்படும்.
இது இப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையமாகும். கிருமாம்பாக்கம் மற்றும் சுற்று பகுதியில் நடக்கும் விழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு, தங்களது பகுதியிலேயே உடனடியாக பால் வினியோகிக்கும் வகையில் சூப்பர் ருசிபால் பூத் திறக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சூப்பர் ருசிபால் பால் மற்றும் தயிர், தேவைப்படுவோர் 93857 55065 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

