/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 25, 2024 07:14 AM

புவனகிரி, : புவனகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புவனகிரி அருகே மேலமூங்கிலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கலா வரவேற்றார். புவனகிரி ரோட்டரி சங்கத் தலைவர் சேஷாத்ரி தலைமை தாங்கினார்.
விஜய்பிரபு, ஊராட்சி ராஜராஜன்,சொக்கன் கொல்லை பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலம் முன்னிலை வகித்தனர்.
புவனகிரி ஆர்.வி.பி., மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கதிரவன், ரோட்டரி சங்க நிர்வாகி கிருஷ்ணராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து, கல்வி உபகரணங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் ராஜசேகரன், கிருஷ்ணராஜ், சந்தோஷ், அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.