/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயி சந்தேக மரணம்; போலீசார் விசாரணை
/
விவசாயி சந்தேக மரணம்; போலீசார் விசாரணை
ADDED : மே 10, 2024 09:48 PM
திட்டக்குடி: ராமநத்தம் அருகே விவசாய கிணற்றில் இறந்து கிடந்த விவசாயியின் உடலைக்கைப்பற்றி ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநத்தம் அடுத்த கல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்,60, விவசாயி. கடந்த 24ம் தேதி வயலுக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை சேகர் மனைவி மூக்காயி,55, வயலுக்குச்சென்றார். அங்கிருந்த விவசாய கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், உள்ளே எட்டிப்பார்த்த போது சேகரின் உடல் மிதந்ததை பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று உடலைக்கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் சந்தேக மரணம் பிரிவின் கீழ் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.