/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
/
மகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
ADDED : ஆக 19, 2024 11:30 PM
கடலுார்: மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த அவியனுாரைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் மோகன்ராஜ், 27; இவரது மனைவி புஷ்பலதா என்கிற திலோத்தமா, 23; கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆடி மாதம் என்பதால் புஷ்பலதா தனது தாய் வீடான கடலுார் அடுத்த கரைமேட்டில் இருந்தவரை கடந்த 15ம் தேதி மோகன்ராஜ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த புஷ்பலதா கடந்த 17ம் தேதி மீண்டும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
மோகன்ராஜ், மாமியார் வீட்டிற்குச் சென்று மனைவியை அழைத்ததால் அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மோகன்ராஜ் அங்கிருந்து சென்று விட்டார். இதனால், மனமுடைந்த புஷ்பலதா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் சாவில் சந்தேகம் இருப்பாதாக ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

