sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வரி செலுத்துவோர் சங்கம் கோரிக்கை

/

மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வரி செலுத்துவோர் சங்கம் கோரிக்கை

மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வரி செலுத்துவோர் சங்கம் கோரிக்கை

மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வரி செலுத்துவோர் சங்கம் கோரிக்கை


ADDED : ஆக 25, 2024 11:55 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் நகரில் அனைத்து மக்களுக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வரி, வாக்கு செலுத்துவோர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கடலுார் வரி மற்றும் வாக்கு செலுத்துவோர் மற்றும் நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் 3ம் ஆண்டு விழா புதுப்பாளையம் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார். சிறப்பாக சமூக சேவை செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிர்வாகிகள் சாரல் சங்கர், முத்துகுமாரசாமி, முகுந்தன், பிரபுகுமார், ராஜதுரை, பாலசுந்தரம், வாணிவரதன், தண்டபாணி, லோகு, கண்ணன், செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கடலுார் நகரில் சுத்தமான குடிநீர் அனைத்து மக்களுக்கும் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வன்னியர்பாளையத்தில் நவீன தகன மேடை அமைக்க வேண்டும். திருவந்திபுரம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும், நகரில் உள்ள பூங்காக்கள் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us