/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு
/
ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு
ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு
ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு
ADDED : பிப் 22, 2025 09:32 PM
வேப்பூர்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற மாநாடு அருகே, பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர் மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன்,59; வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தனது பணியை நிரந்தரமாக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு நடைபெற்ற திருப்பயர் அருகே உள்ள கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சமாதானம் செய்ததை தொடர்ந்து, 7:15 மணிக்கு டவரில் இருந்து இறங்கினார். இச்சம்பவத்தினால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

