ADDED : ஆக 04, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பொது இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ஆயியார் மடத் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் எம்.ஆர்.கே.,நகரை சேர்ந்த எத்திராஜ் மகன் மணியழகன், 35, என்பவர் பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் இடையூறாக நின்று கொண்டு ஆபாசமாக பேசினார். இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணியழகனை கைது செய்தனர்.