/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
ADDED : ஏப் 26, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த, வன்னியர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் சத்தியராஜ், 35; திருமணமாகாத இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாததால், அவரது தந்தை கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த சத்தியாஜ், கடந்த, 24ம் தேதி வயலுக்கு வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

