ADDED : மே 01, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அருகே வயிற்று வலியால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நடுவீரப்பட்டு அடுத்த வி.காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் காண்டீபன்,32; கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். வயிற்று வலி அதிகமானதால் நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து குடித்தார்.
கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு நேற்று இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

