ADDED : மே 31, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் பைரவர் சுவாமிக்கு நேற்று மாலை தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
இதனையொட்டி, நேற்று காலை 7:30 மணியளவில் மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம், 8:00 மணியளவில் தீபாராதனை நடந்தது.
மாலை 5:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை, மாலை 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.