sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிப்பர் மீது டெம்போ மோதி டிரைவர், கிளீனர் பரிதாப பலி

/

டிப்பர் மீது டெம்போ மோதி டிரைவர், கிளீனர் பரிதாப பலி

டிப்பர் மீது டெம்போ மோதி டிரைவர், கிளீனர் பரிதாப பலி

டிப்பர் மீது டெம்போ மோதி டிரைவர், கிளீனர் பரிதாப பலி


ADDED : ஜூலை 06, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்,:புதுச்சேரி, காரைக்கால் அடுத்த சேமியான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சையத்முகமது, 25; டிரைவர். காரைக்கால் மீராப்பள்ளி தோட்டத்தை சேர்ந்தவர் முகமது ரியாஸ், 20; கிளீனர்.

இருவரும் நேற்று முன்தினம் இரவு டெம்போவில், காரைக்காலில் இருந்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனிக்கு, கோழி கழிவுகளை ஏற்றிச் சென்றனர்.

திண்டிவனம் அருகே சென்றபோது, தனியார் நிறுவனத்தில் இருந்து மொபைலில் அழைத்து, 'கோழி கழிவுகளை எடுத்துவர வேண்டாம்; காரைக்காலுக்கு திரும்பி செல்லுங்கள்' என, தெரிவித்துள்ளனர்.

அதனால், திண்டிவனத்திலிருந்து காரைக்கால் திரும்பினர். நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் கடலுார் அடுத்த புதுச்சத்திரம் மேம்பாலத்தில் வந்தபோது, பஞ்சராகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி டெம்போ விபத்துக்குள்ளானது. இதில், சையத்முகமது, முகமது ரியாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுச்சத்திரம் போலீசார் உடல்களை கைப்பற்றி கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us