/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
/
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
ADDED : மே 13, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எடையூரை சேர்ந்தவர் சிவக்குமார், 54. கடந்த 7ம் தேதி கோமங்கலம் பெட்ரோல் பங்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து நடந்து சென்றார். அவர் மீது விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் (டி.என்.05 - ஏ.எப்.7647) மோதியது.
தலையில் பலத்த காயமடைந்த சிவக்குமார், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி முனியம்மாள் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.