ADDED : மே 10, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: உரிமம் பெறாத வெடிப்பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, கோ.சத்திரம், பழையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் தயார் செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
அனுமதியின்றி, வெடி பொருட்களை தயார் செய்யும் உபகரணங்களை வைத்திருந்த, பாலுார் மெயின் ரோட்டை சேர்ந்த, கமலக்கண்ணன், 45, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்தனர்.