ADDED : மே 15, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக யமஹா மோட்டார் பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்த ஞானவேல் மகன் சந்தோஷ், 23; என தெரியவந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து சந்தோைஷ கைது செய்தனர்.