ADDED : ஆக 18, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த வானமாதேவி கடலுார் - பாலுார் சாலையை ஒட்டி 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் இருந்தது.நேற்று இரவு 7 மணியளவில் திடீரென மர்மான முறையில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
இதற்கிடையே மரத்தின் பெரிய கிளை சாலையில் விழுந்ததால் 7 மணி முதல் 7.30 வரை போக்குவரத்து பாதித்தது.தீயணைப்பு வீரர்கள் சாலையில் கிடந்த கிளையை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் மரம் எப்படி தீப்பிடித்தது என விசாரித்து வருகின்றனர்.