ADDED : ஜூலை 11, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி, ராமநத்தம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தி: , முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர் இறந்தார்.
ராமநத்தம் அடுத்த மேலக்கல்பூண்டியை சேர்ந்தவர் செல்வராஜி, 63, முன்னாள் ஊராட்சி தலைவர் நல்லம்மாளின் கணவர். இவர் நேற்று மதியம் அவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் மூலம் ஏர் உழுதுவிட்டு வீட்டிற்கு வந்தார். சாலை வளைவில் திரும்பும்போது பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செல்வராஜி, டிராக்டரின் அடியில் சிக்கி இறந்தார்.
ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.