sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது; மின் துண்டிப்பால் மக்கள் அவதி

/

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது; மின் துண்டிப்பால் மக்கள் அவதி

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது; மின் துண்டிப்பால் மக்கள் அவதி

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்தது; மின் துண்டிப்பால் மக்கள் அவதி


ADDED : மே 02, 2024 11:25 PM

Google News

ADDED : மே 02, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அருகே நள்ளிரவில் மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையம் பின்புறம் கே.ஆர்.எம். நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இப்பகுதியில் 2 டிரான்ஸ்பார்மர் மூலம் மின் சப்ளை வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், மின் அழுத்தம் காரணமாக, 40 கே.வி. டிரான்ஸ்பார்மர் வெடித்து, தீப்பிடித்தது. பெரும் சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் அண்ணாமலைநகர் பேரூராட்சி சேர்மன் பழனி, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, மின்துறை அதிகாரிகளிடம், தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து, நேற்று காலை முதல், மின்துறை அலுவலர் சுபாஷினி தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி, டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், நேற்று இரவு 7:00 மணியளவில் மீன்சாரம் வழங்கப்பட்டது.

இதனால், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் தவித்தனர்.






      Dinamalar
      Follow us