/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காதல் கணவருடன் செல்ல விருப்பம் போலீசாரிடம் இளம்பெண் உறுதி
/
காதல் கணவருடன் செல்ல விருப்பம் போலீசாரிடம் இளம்பெண் உறுதி
காதல் கணவருடன் செல்ல விருப்பம் போலீசாரிடம் இளம்பெண் உறுதி
காதல் கணவருடன் செல்ல விருப்பம் போலீசாரிடம் இளம்பெண் உறுதி
ADDED : ஜூன் 01, 2024 06:39 AM
விருத்தாசலம், : கம்மாபுரம் அருகே மாயமான இளம்பெண், காதலரை திருமணம் செய்து கொண்டு, அவருடன் செல்வதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.
விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் சரவணன் மகள் சரிதா, 19. விருத்தாசலம் தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டாமாண்டு மாணவி. 29ம் தேதி வழக்கம்போல கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இதற்கிடையே, அரியலுார் மாவட்டம், வி.கைகாட்டி, மண்ணுழி பொக்லைன் ஆபரேட்டர் மதியழகன் மகன் ரவிக்குமார், 22, என்பவருடன் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்ட சரிதா, அரியலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.
தகவலறிந்த கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் உத்தரவின்பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அதில், கணவருடன் செல்வதாக சரிதா கூறியதால், அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு, மணமக்களை அனுப்பி வைத்தனர்.