ADDED : செப் 07, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக வாலிபரை பிளேடால் கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கார்குடலைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், 44; செந்தில்குமார் மகன் ஆகாஷ், 23; இருவருக்கும் கடந்த மாதம் 23ம் தேதி முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆகாஷ் மறைத்து வைத்திருந்த பிளேடால், பிரபாகரன் கையில் கிழித்தார்.
காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த ஆகாைஷ நேற்று கைது செய்தார்.