ADDED : மே 01, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே இரும்பு கடையில், ரூ.10 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் முதல்தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்,36. இவர் புதுக்கூரைப்பேட்டையில் இரும்புகடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு செல்வக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில், அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.