
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு சிறப்பு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

