/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்
/
நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்
ADDED : ஆக 29, 2024 11:29 PM

கடலுார்: சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம், சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கி பேசினார்.
ஆசிரியைகள் கலைச்செல்வி, ராஜேஸ்வரி ஆகியோர் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர். செயலாளர் நடராஜன் வாழ்த்தி பேசினார். விழாவில் ஆசிரியர்கள் ஜெயந்தி, பூமா, வளர்மதி உட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியை தெய்வாணை நன்றி கூறினார்.