ADDED : செப் 10, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சிதம்பரம் பச்சையப்பா மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடந்தது.
தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
தமிழ் ஆசிரியர் ஜீவா வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.செயலாளர்நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
ஆசிரியர்கள் சங்கர், ராமன், அருள், பிரகாசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்கள் ஜீவா, இளவரசி, மகாராணி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
ஆசிரியர் ராஜராஜன் நன்றி கூறினார்.