/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு கடலுாரில் மறியல்: 50 பேர் கைது ..
/
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு கடலுாரில் மறியல்: 50 பேர் கைது ..
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு கடலுாரில் மறியல்: 50 பேர் கைது ..
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு கடலுாரில் மறியல்: 50 பேர் கைது ..
ADDED : ஜூலை 12, 2024 06:15 AM

கடலுார்: கடலுாரில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ., வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பற்றி அண்ணாமலை பேசியதை கண்டித்து, நேற்று முன்தினம் கடலுாரில், காங்., சார்பில், அண்ணாமலை உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
இந்நிலையில், உருவ பொம்மை எரித்த காங்., நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்து கைது செய்யக் கோரி, கடலுார் மாவட்ட பா.ஜ., சார்பில் நேற்று கடலுார் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வேல் வெங்கடேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
கடலுார் டி.எஸ்.பி., பிரபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், பா.ஜ.,வினர் மறைத்து வைத்திருந்த செல்வபெருந்தகை உருவ பொம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றனர். இதனை போலீசார் பிடுங்கியதால், போலீசாருக்கும், பா.ஜ.,வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் பா.ஜ.,வினர் ஊர்வலமாக எஸ்.பி.,யிடம் கோரிக்கை மனு அளிக்க செல்கிறோம் என புறப்பட்டனர். அதற்கு டி.எஸ்.பி., ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை என தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.,வினர் பாரதி ரோட்டில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது. உடன் போலீசார் 6 பெண்கள் உட்பட பா.ஜ.,வினர் 50 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.