/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் சிக்கியோர் மீது டிராக்டர் மோதல்; கடலுார் வாலிபர்கள் உட்பட 4 பேர் பலி
/
விபத்தில் சிக்கியோர் மீது டிராக்டர் மோதல்; கடலுார் வாலிபர்கள் உட்பட 4 பேர் பலி
விபத்தில் சிக்கியோர் மீது டிராக்டர் மோதல்; கடலுார் வாலிபர்கள் உட்பட 4 பேர் பலி
விபத்தில் சிக்கியோர் மீது டிராக்டர் மோதல்; கடலுார் வாலிபர்கள் உட்பட 4 பேர் பலி
ADDED : மே 03, 2024 12:24 AM

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே நடந்த சாலை விபத்தில் கடலுார் வாலிபர்கள் உள்ளிட்ட மூவர் உட்பட நான்கு பேர் பலியாகினர்.
கடலுார், பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர்கள் முகமது அலி மகன் முகமது சஹின்,19; சுரேஷ் மகன் ஹரிகரன்,20; திருஞானம் மகன் ஆகாஷ்,20; நண்பர்களான இவர்கள் மூவரும் ஹரிகரன் மாமாவிற்கு சொந்தமான பிஒய்.05-ஆர்-5519 பதிவெண் கொண்ட கே.டி.எம்., பைக்கில் நாகப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கிருந்து நேற்று காலை 10:00 மணிக்கு மூவரும் பைக்கில் கடலுாருக்கு புறப்பட்டனர். பைக்கை ஆகாஷ் ஓட்டினார்.
தரங்கம்பாடி மெயின் ரோட்டில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ஸ்ரீதர்,48; ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. அதில் நிலைதடுமாறி 4 பேரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் முகமது சஹின், ஹரிகரன், ஆகாஷ் ஆகியோர் மீது ஏறி இறங்கியது. அதில், மூவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த ஸ்ரீதரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்து குறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.