/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா
/
பெண்கள் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 18, 2024 11:16 AM

புவனகிரி: புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, அரசுத் தேர்தல் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் தன்னம்பிக்கை முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை சரவணஜான்ஸிராணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினசுப்பிரமணியர், ஊழல் எதிர்ப்பு இயக்க துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிமாறன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
தன்னம்பிக்கை பேச்சாளர் பச்சைமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று அரசுப்பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 15 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு கல்வி வளார்ச்சி தினம் கொண்டாடினர். ஊழல் எதிர்ப்பு இயக்கத் துணைத் தலைவர் ஜெகன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ், செந்தில்வடிவு, ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை அன்பழகன் தொகுத்து வழங்கினார்.