/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.வீ.செ. பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
/
த.வீ.செ. பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
த.வீ.செ. பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
த.வீ.செ. பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 06, 2024 05:13 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, பாடம் சார்ந்த அறிவு, நாட்டு நடப்புகள், அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சிகள், விஞ்ஞான அறிவை வளர்க்கும் தகவல்கள்,உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு சுருக்கமாகவும், எளிதில் புரியும் வகையிலும் வழங்கும் நோக்கத்துடன் 'தினமலர் -பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளிவருகிறது.
பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், எதிர்கால தலைமுறையின் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில் அக்கறைகொண்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயலர் செந்தில்நாதன், முதல்வர் ஆர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு முதல் கட்டமாக பள்ளியில் பயிலும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 200 மாணவ மாணவிகளுக்கு 'பட்டம்' இதழை வழங்கினர்.