ADDED : மே 22, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மதுபோதையில் தகராறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது ஜங்ஷன் சாலையில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் அருகே மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்த முல்லாதோட்டம் கணேசன் மகன் கார்த்திகேயன், 34; என்பவரை கைது செய்தனர்.
இதேபோல, பாலக்கரை ரவுண்டானா அருகே பணிபூண்டார் வீதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அருணா, 43; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
