ADDED : மார் 05, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெரு வில், வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று, லாட்டரி சீட்டுகள் விற்ற தியாக செட்டி தெருவை சேர்ந்த கணேசன், 60; ஹனிபா, 72; ஆகிய இருவரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிந்தனர்.