ADDED : ஆக 04, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர். முகுந்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த திருமலை, 50; குறிஞ்சிப்பாடி வட்டம், அம்பலவாணன்பேட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல், 42, ஆகியோர் விருத்தாசலம் பஸ் நிலையம் பகுதியில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5மதுபாட்டில் மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.