sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனவளர்ச்சி குன்றிய இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

/

மனவளர்ச்சி குன்றிய இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

மனவளர்ச்சி குன்றிய இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

மனவளர்ச்சி குன்றிய இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு


ADDED : ஏப் 18, 2024 12:41 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சந்தானலட்சுமி தம்பதியின் மகன்கள் திலீப், 16, தினேஷ், 14. மனவளர்ச்சி குன்றிய இவர்கள், கடலுாரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில், முறையே 9 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தனர்.

இவர்களின் தாய் சந்தானலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். தந்தை ராமமூர்த்தி சென்னையில் வேலை செய்து வருகிறார். இதனால், இருவரும் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், தேர்வு முடிந்து விடுமுறையில் கடந்த வாரம் நந்தீஸ்வரமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள குளத்தில் இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

தகவலறிந்த சோழத்தரம் போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us