/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி கொலை வழக்கு இருவர் சிக்கினர்
/
திட்டக்குடி கொலை வழக்கு இருவர் சிக்கினர்
ADDED : ஜூன் 26, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் பாலாஜி,46; பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர். இவர் கடந்த 17ம் தேதி திட்டக்குடி அடுத்த கோழியூர் வெள்ளாற்றில் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து நெய்வேலியை சேர்ந்த 47 வயது ஆண் மற்றும் பெரம்பலுார் மாவட்டம் குன்னத்தை சேர்ந்த 31வயது பெண் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.