sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பதிவு பெறாத மகளிர் விடுதி கலெக்டர் எச்சரிக்கை

/

பதிவு பெறாத மகளிர் விடுதி கலெக்டர் எச்சரிக்கை

பதிவு பெறாத மகளிர் விடுதி கலெக்டர் எச்சரிக்கை

பதிவு பெறாத மகளிர் விடுதி கலெக்டர் எச்சரிக்கை


ADDED : ஜூன் 12, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : அரசு பதிவு பெறாமல் மகளிர் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அரசு உரிமம் பெற்று நடத்த கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விடுதிகள் செயல்படுவதற்காக அரசு உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தலுக்கு, அரசு இணையதளம் www.tnswp.com-ல் பதிவு செய்ய வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்த நகலினை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலுார் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யாமல் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us