/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வசந்த் அண்ட் கோ நிறுவனர் நினைவு நாள்
/
வசந்த் அண்ட் கோ நிறுவனர் நினைவு நாள்
ADDED : ஆக 31, 2024 03:03 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், வசந்த் அண்ட் கோ நிறுவனர் மறைந்த எம்.பி., வசந்தகுமார் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
காங்., செயல் தலைவராக இருந்த கன்னியாகுமரி முன்னாள் எம்.பி., வசந்தகுமாரின், நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு நடந்தது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வசந்த் அண் கோ நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு, தமிழக முன்னாள் காங்., தலைவர் அழகிரி மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
மாநில செயலாளர் சித்தார்த்தன், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், ஜெயச்சந்திரன், மடுவங்கரை சுந்தரராஜன், கார்த்திகேயன், ரங்கநாதன், குமார், இளைஞர் காங்., அன்பரசன், பாலகிருஷ்ணன், சசி, ராஜவேல், முரளி மற்றும் காங்., கட்சியினர், நிறுவன ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.