/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாகன கண்ணாடி உடைப்பு; 3 பேர் மீது வழக்கு
/
வாகன கண்ணாடி உடைப்பு; 3 பேர் மீது வழக்கு
ADDED : மே 06, 2024 03:33 AM
நடுவீரப்பட்டு : பாலுார் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பண்ருட்டி அடுத்த பாலுார் அருகே உள்ள பழைய சன்னியாசிப்பேட்டை காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன், 43; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள் மகன் சுருதிக், 22; என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் குடும்ப பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே சென்ற வெங்கடேசனை சுருதிக், இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு,செந்தில் ஆகிய 3 பேரும் ஆபாசமாக திட்டி தாக்கினர்.
மேலும் வெங்கடேசனுக்கு சொந்தமான டி.என்.83 பி 8236 என்ற எண்ணுள்ள தோஸ்த் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் சுருதிக், 22; விஷ்ணு, 23; செந்தில், 25; ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.