/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேம்புலியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
வேம்புலியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஆக 31, 2024 03:08 AM

கடலுார்: கடலுார் துறைமுகம் சலங்குகார கிராம வேம்புலியம்மன் கோவிலில், மகா கும்பாபிேஷக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக பூஜை, தன பூஜை, கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்பாலங்காரம், கலாகர்ஷணம் நடந்தது.
இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை முதல் கால யாக பூஜை ேஹாமம் மற்றும் நேற்று 30ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ேஹாமம், காலை 8:00 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது.
காலை 9:00 மணிக்கு மூலவர் விமானம், பரிவார கும்பாபிேஷகம் மற்றும் காலை 9:30 மணிக்கு மூலவர் வேம்புலி அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.