sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியல்

/

ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியல்

ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியல்

ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியல்


ADDED : செப் 03, 2024 06:15 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை தடுக்க கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 1:00 மணியளவில், ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலுார் மார்க்கமாக சென்ற வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இருசக்கர வாகனங்களை கூட அனுமதிக்காததால், வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, நத்தம் புறம்போக்கு நிலத்தை வெங்கடேசன் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதை தடுக்க வலியுறுத்தினர். இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆக்கிரமிப்பு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதுபோல், வெங்கடேசனை நேரில் வரவழைத்து, தாசில்தார் உத்தரவு வரும் வரை கட்டுமான பணியை தொடரக் கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், கடலுார் - விருத்தாசலம் சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us