ADDED : மே 23, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
கடலுார்: திரவுபதியம்மன் கோவிலில் இன்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கடலுார் அடுத்த சுத்துக்குளம் திரவுபதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த, 7ம் தேதி கணபதி பூஜை நடந்தது.
கடந்த, 12ம் தேதி காலை கொடியேற்றுதலுடன் விழா துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
நேற்று பகாசூரனுக்கு அன்னம் அளித்தல் உற்சவம் நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு மேல் திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து இரவு ஸ்ரீபுஷ்ப நிவாஷ நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுத்துக்குளம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
